"கோவையில் ஆண் மலட்டுத் தன்மை அதிகரித்து வருகிறது, கவலைக்குறியது"


கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் அதிகரித்து வரும் உடல்நிலைக் குறைபாடுகளில் ஒன்று ஆண்களிடையே உள்ள மலட்டுத் தன்மை ஆகும். இது பெரும்பாலும், 29 முதல் 35 வயதினரிடையே அதிகளவில் காணப்படுவதாக நோவா ஐவிஐ கருத்தரிப்பு நிபுணர் மருத்துவர் மீனாட்சி தெரிவித்தார்.

இதுகுறித்து கோவை நோவா ஐவிஐ கருத்தரிப்பு நிபுணர் மருத்துவர் மீனாட்சி மேலும் கூறியதாவது:-



“கோவையில் தற்போது ஆண்மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் 29 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களிடம் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. ஆண் மலட்டுத்தன்மை பரம்பரை அடிப்படையில்வரக் கூடும். தொற்று, விதைப்பையில் காயம் உள்ளிட்ட சில மருத்துவக் காரணங்களாலும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும்.

வயது, ஊட்டச்சத்து குறைபாடு, முறையான உடற்பயிற்சி இன்மை, வேலை பளு மற்றும் மன அழுத்தம், சுற்றுச் சூழல் பாதிப்பால் ஏற்படும் தாக்கம் போன்ற வாழ்க்கை முறை காரணங்களும் ஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்படக் காரணமாக அமைகின்றன.

புகைபிடிக்கும் பழக்கம், சட்ட விரோத போதை மருந்து பயன்பாடு, மதுப்பழக்கம், உடல் பருமன், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) உள்ளிட்டவையும் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

தற்போது மருத்துவ ஆய்வு முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் சிறிய காரணிகள் கூட தெளிவாக கண்டறியப்படுகிறது. இது முன்பு சாத்தியம் இல்லாமல் இருந்தது. பெண்ணை மட்டுமே நிரந்தரமாக குறை கூறாமல் பாதிப்பு உள்ள சரியான நபருக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த பரிசோதனை முறைகள் உதவுகின்றன.

மலட்டுத் தன்மை மற்றும் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகள் சரியான உதவியை நாடவேண்டியது அவசியம்” என்றார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...